🔴 நாளை முதல் அமுலுக்கு வரும் , வாகன உரிமையாளர்கள் சாரதிகளுக்கான அறிவிப்பு


மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஊடாக வழங்கப்படும் சேவைகள் நாளை மார்ச் 4 முதல் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்பட உள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார் 

அதன்படி, நாளை முதல் நாட்டில் உள்ள எந்தவொரு மோட்டார் போக்குவரத்து திணைக்கள கிளைகளில்  சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு முன்கூட்டியே திகதி மற்றும் நேரத்தை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம்  தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் கடந்த பிப்ரவரி 29 இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், 

அதற்காக 2 117 116 இலக்கமும் , www.dmtappointments.dmt.gov.lk என்ற  இணைய முகவரியையும் அறிமுகம் செய்துள்ளதாக தெரியப்படுத்தி இருந்தார் .

கருத்துரையிடுக

புதியது பழையவை