🔴நேற்றைய மோசமான தோல்வியின் பின் தனது முடிவை அறிவித்துள்ளார் மேக்ஸ்வெல்


நேற்று நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஹைதராபாத் அணி பல உலக சாதனைகளுடன் வெற்றி பெற்றது.


இதன் மூலம் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் அதிக ஓட்டங்களை பெற்ற அணி என்ற சாதனையை புதுப்பித்துள்ளது.

ஹைதராபாத் அணியினர் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 287 ரன்களை எடுத்தனர் .

அதேநேரம் நேற்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன .

வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மற்றும் ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் இந்தப் போட்டியில் இருந்து நீக்கப்பட்டு இருந்தார்கள் .

எனினும், இந்த போட்டியின் பின்னர், எதிர்வரும் போட்டிகள் குறித்து கிளென் மேக்ஸ்வெல் தனது முடிவை அறிவித்துள்ளார் .

ராயல் சேலஞ்சர்ஸ் அணி பங்கேற்கும் இனி வரும் போட்டிகளில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார் .

பல போட்டிகளில் சிறப்பாக விளையாட தவறிய அவர் சரியான மனநிலையில் இல்லை எனவும் தனக்கு ஓய்வு தேவை எனவும் கூறி இந்த முடிவை அறிவித்துள்ளார்

இந்த முடிவு குறித்து ராயல் அணியின் பயிற்சியாளரும் கேப்டனுமான பாஃப் டு பிளெசிஸிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கருத்துரையிடுக

புதியது பழையவை