🔴மொட்டு கட்சியினுடன் இணைந்த மறைந்த இ.அமைச்சரின் மனைவி


மொட்டு கட்சியின் ஒழுக்காற்று குழுவின் பிரதானிகளாக சட்டத்தரணி ராசிக் ஷாருக் மற்றும் டபிள்யூ. தயாரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஏழு உறுப்பினர்களைக் கொண்ட ஒழுக்காற்று குழுவின் ஏனைய அங்கத்தவர்களாக சட்டத்தரணிகளான அதுல டி சில்வா, மஞ்சுள வெல்லாலகே, சரத் அத்துகோரள, துஷாரி சூரியாராச்சி, முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மனைவி சமரி பெரேரா நியமிக்கப்பட்டதாகவும்,

ஒழுக்காற்று சபைக்கு பாராளுமன்ற உறுப்பினர்களை நியமிக்காமல் இருப்பதற்கு  தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் .

கடந்த 27 ஆம் திகதி இந்த குழு நியமனம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது .

(ஹிரு செய்தி)

கருத்துரையிடுக

புதியது பழையவை