🔴ஆசிரிய உதவியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு விரைவில்


தோட்டப் பாடசாலைகளுக்கான 2,535 ஆசிரியர் உதவியாளர்களுக்கான விண்ணப்பங்களை கோருவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.


எதிர்வரும் மே மாதத்துக்குள் ஆசிரிய உதவியாளர்களை ஆட்சேர்ப்பு செய்து , அவர்களுக்கு அடிப்படை பயிற்சிகளை வழங்கி பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார் .


பெருந்தோட்டப் பாடசாலைகளில் தொடர்ந்தும் பாரிய ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும், அங்கு கல்விக் கல்லூரிகளுக்கு  தகுதிபெறும் மாணவர்கள் எண்ணிக்கையும் மிகக் குறைவு எனவும் அமைச்சர் குறிப்பிடுகின்றார்.


அதற்கு தீர்வாக தற்போது ஊவா மற்றும் மத்திய மாகாணத்தில் உள்ள பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட மாகாண அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அமைச்சர் பரிந்துரைத்துள்ளார் .

கருத்துரையிடுக

புதியது பழையவை