🔴எயிட்ஸ் நோய் அதிகரிப்பை தொடர்ந்து ஸ்பாக்கள் சுற்றிவலைப்பு


சில நாட்களுக்கு முன்பு நீர்கொழும்பு ஸ்பா நிலையத்தில் பணிபுரிந்த பெண்கள் எய்ட்ஸ் தொற்றுக்கு உள்ளாகி இருந்தமையை தொடர்ந்து ,

நாடு முழுவதும் உள்ள ஸ்பா நிலையங்களின்  எய்ட்ஸ் தொற்று கொண்டவர்கள் மற்றும் அதன்   சட்டபூர்வ தன்மை தொடர்பாக  கண்டறியவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .

அதன்படி அநுராதபுரம் நகரின் பல ஸ்பா நிலையங்களை சுற்றிவளைத்து பொலிஸார் அங்கிருந்த 04 பெண்களை கைது செய்துள்ளனர்.

எவ்வாறாயினும், கைது செய்யப்பட்ட 4 பெண்களும் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதை பரிசோதிப்பதற்காக இன்று மருத்துவ பரிசோதனைக்கு அவர்கள் உட்படுத்தபட்டதாக தெரிவிக்கப்படுகிறது .

மேலும் , மாத்தறை நகரைச் சுற்றியுள்ள ஸ்பா நிலையங்களில் பணியாற்றிய 12 யுவதிகளும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

புதியது பழையவை