நாளை 2 மே தின கூட்டங்களில் கலந்துகொள்ள உள்ள ஜனாதிபதி


சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை நடைபெறவுள்ள இரண்டு மே தினக் கூட்டங்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

நாளை காலை கொட்டகலை மைதானத்தில் நடைபெற உள்ள தோட்டத் தொழிலாளர்களின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்கும் ஜனாதிபதி, பின்னர் பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு மாளிகாவத்தையில் நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்திலும் பங்கேற்கவுள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களின் மே தினப் பேரணியில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக ஜனாதிபதி விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளதாகவும் லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது .





Ceylon paper , Ceylon news , ceylon tamil news , today news in tamil srilanka , news in tamil srilanka , ceylon paper news , srilanka tamil news , srilanka news tamil
Today srilanka tamil news , srilanka tamil news today

கருத்துரையிடுக

புதியது பழையவை